சித்தர் அறிவியல்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம்,
நாடி சோதிடம்
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம்,
நாடி சோதிடம்
நாடி சோதிடம் நம்மில் பலர் ஆச்சர்யத்துடன் மலைக்கவைக்கும் அதிசயம்.
சித்தர்களால் உலகிற்கு அளிக்கப் பட்ட கொடை, இதுவரை பிறந்த அல்லது இனி
பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப்
போனா விலைமதிப்பில்லா பொக்கிஷம்...இப்படியெல்லாம்தான் நாம் புரிந்து
வைத்திருக்கிறோம்.
இதைக் குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர், இம்முறை குறித்த ஓர் அறிமுகம். அதாவது ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் இந்த முறை. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும்.இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.
உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார். நீங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இனி இது தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
சித்தர்களின் பெயரில் சொல்லப்படும் மூட நம்பிக்கைக்களையோ மலிவான வியாபார உத்திகளையோ நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதன் பொருட்டே எனக்கான தேடலை தொடங்கி நான் அறிந்த மற்றும் உணர்ந்த தகவல்களை பதிவும் செய்கிறேன்.
இதனை சொல்வதால் நான் சித்தர்களின் பாடல்களையோ, அவர்கள் சொன்ன செய்திகளையோ சந்தேகிக்கிறேன் என்று அர்த்தமில்லை, பலரும் நம்பாத சித்தர்களின் ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை மற்றும், ஆர்வத்துடனும் தொடர்ந்து தேடுதல் செய்து வருகிறேன்.
நான் புரிந்து கொண்ட வகையில் சித்தர்கள் நாடி என்பது ஒரு குறிப்பிட்ட தனி மனிதர்களை சார்ந்ததாக இல்லை. மேலும் அவர்கள் தனிமனிதர்கள் குறித்து பெரிதாக எதுவும் எழுதியதும் இல்லை. தனது குரு, அல்லது சீடர் பற்றிய குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடியாதாக இல்லை.
நிதர்சனம் இப்படி இருக்க உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள் என்றால் அதன் உண்மை தன்மை குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே.
மேலும் அவர்கள் பாடல்கள் எல்லாம் மறை பொருளில் பாடப்பட்டவைகளே, அப்படி இருக்க, இந்த நாடி ஜோதிடத்தில் மட்டும் தெளிவாக எழுதியிருப்பதன் மர்மம் என்ன? என்பதுதான் என்னுடைய தேடலின் துவக்க புள்ளி.
சித்தர்கள் சோதிடம் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று அர்த்த மல்ல, சித்தர்கள் சோதிடத்திலும் வல்லவர்களே, அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ரேகைகளை கொண்டு எழுதியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தான் சொல்கிறேன்.
அப்படியானால் சித்தர்கள் சொன்ன நாடி என்பது என்ன?
சித்தர்கள் சொன்ன நாடி என்பது நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட, கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளும் முறை மட்டுமே...
இதற்க்கு உதாரணமாக அகத்தியர் நாடியின் ஒரு சில பாடல்களை கீழே தந்துள்ளேன்...
"கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடிபார்க்கில்
பெருவிரலங்குலத்தில் பிடித்த நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் முயர்நடுவில் பித்தம்
திருவிரல் மூன்று லோடிற் செத்தும நாடியாமே."
- அகத்தியர் நாடி -
"ஆகிய நாடி மூன்றும் படபடவேன்றோடிற் சென்னி
வாக்கினிலன்னம் கோழி மயிலென் நடக்கும் வாதம்
எகியவா மையட்டை இவையென நடக்கும் பித்தம்
போகியே தவளை பாம்பு போல்வான் சேத்துமம் தானே"
k.kanaail meganathan.by.www.danvantarinadi.com
இதைக் குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர், இம்முறை குறித்த ஓர் அறிமுகம். அதாவது ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் இந்த முறை. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும்.இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.
உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார். நீங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இனி இது தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
சித்தர்களின் பெயரில் சொல்லப்படும் மூட நம்பிக்கைக்களையோ மலிவான வியாபார உத்திகளையோ நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதன் பொருட்டே எனக்கான தேடலை தொடங்கி நான் அறிந்த மற்றும் உணர்ந்த தகவல்களை பதிவும் செய்கிறேன்.
இதனை சொல்வதால் நான் சித்தர்களின் பாடல்களையோ, அவர்கள் சொன்ன செய்திகளையோ சந்தேகிக்கிறேன் என்று அர்த்தமில்லை, பலரும் நம்பாத சித்தர்களின் ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை மற்றும், ஆர்வத்துடனும் தொடர்ந்து தேடுதல் செய்து வருகிறேன்.
நான் புரிந்து கொண்ட வகையில் சித்தர்கள் நாடி என்பது ஒரு குறிப்பிட்ட தனி மனிதர்களை சார்ந்ததாக இல்லை. மேலும் அவர்கள் தனிமனிதர்கள் குறித்து பெரிதாக எதுவும் எழுதியதும் இல்லை. தனது குரு, அல்லது சீடர் பற்றிய குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடியாதாக இல்லை.
நிதர்சனம் இப்படி இருக்க உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள் என்றால் அதன் உண்மை தன்மை குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே.
மேலும் அவர்கள் பாடல்கள் எல்லாம் மறை பொருளில் பாடப்பட்டவைகளே, அப்படி இருக்க, இந்த நாடி ஜோதிடத்தில் மட்டும் தெளிவாக எழுதியிருப்பதன் மர்மம் என்ன? என்பதுதான் என்னுடைய தேடலின் துவக்க புள்ளி.
சித்தர்கள் சோதிடம் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று அர்த்த மல்ல, சித்தர்கள் சோதிடத்திலும் வல்லவர்களே, அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ரேகைகளை கொண்டு எழுதியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தான் சொல்கிறேன்.
அப்படியானால் சித்தர்கள் சொன்ன நாடி என்பது என்ன?
சித்தர்கள் சொன்ன நாடி என்பது நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட, கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளும் முறை மட்டுமே...
இதற்க்கு உதாரணமாக அகத்தியர் நாடியின் ஒரு சில பாடல்களை கீழே தந்துள்ளேன்...
"கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடிபார்க்கில்
பெருவிரலங்குலத்தில் பிடித்த நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் முயர்நடுவில் பித்தம்
திருவிரல் மூன்று லோடிற் செத்தும நாடியாமே."
- அகத்தியர் நாடி -
"ஆகிய நாடி மூன்றும் படபடவேன்றோடிற் சென்னி
வாக்கினிலன்னம் கோழி மயிலென் நடக்கும் வாதம்
எகியவா மையட்டை இவையென நடக்கும் பித்தம்
போகியே தவளை பாம்பு போல்வான் சேத்துமம் தானே"
k.kanaail meganathan.by.www.danvantarinadi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக